இலங்கையின் துடுப்பாட்டம் பரிதாபகரமானது – மெத்தியுஸ்
இங்கிலாந்து அணியுடனான தோல்வியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும்
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இங்கிலாந்து அணியுடனான தோல்வியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் பரிதாபகரமானதாக இருந்ததென முன்னாள் வீரர் என்ஜலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் தோல்வி குறித்து அவர் தனது ஆதங்கம் நிறைந்த கருத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பந்துவீச்சில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் நிதானத்துடனும், பொறுப்புடனும் விளையாடவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் வேதனைக்குரியதென என்ஜலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.
