அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – இரண்டாவது துப்பாக்கிதாரி கைது?
மொனராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்தின்
Published February 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
மொனராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்தேகநபர் அக்குரேகொட இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியா என்பது தொடர்பில், முக அடையாளம் காணும் கண்காணிப்பு முறைமையினூடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.