முடிவில்லா ஆலோசனைகள்… தீர்வுக்காக காத்திருக்கும் மக்கள்

நேற்று மண்முனை மேற்கு , வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது..........

Published February 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

நேற்று மண்முனை மேற்கு , வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் இருப்பது கவலைக்கிடமானது. மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு , இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இப்பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதே பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் தாமதம் நிலவுகிறது. தமிழரசுக் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகள் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *