மலைச் சிகரத்தில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணம்
இன்று உதய்ப்பூரில் நடிகர் விஜய்தேவரகொண்டா - ராஷ்மிகா காதல் திருமணம்............
இன்று உதய்ப்பூரில் நடிகர் விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா காதல் திருமணம் நடைபெறுகின்றது.நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது.
மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்றது. இதில் 117 அறைகள் உள்ளன. சுமார் 3,000 பேர் தங்கலாம். இந்த ஆடம்பர நிகழ்ச்சிக்குகாக பெயர் பெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் 24 முதல் தொடங்கியது. இன்று ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறுகிறது.