ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியவர்கள் கைது

கடந்த 14ம் திகதி ஜிந்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு ஒத்துழைப்பு

Published February 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கடந்த 14ம் திகதி ஜிந்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

கடவத்த மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். 29 வயதான பெண் சந்தேக நபர் மற்றும் 44 வயது ஆண் சந்தேக நபர் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *