அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை! நாமல் ராஜபக்ஷ

இலங்கையின் ஆட்புலக் கடற்பரப்பிற்கு சற்று அப்பால், இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார

Published March 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

இலங்கையின் ஆட்புலக் கடற்பரப்பிற்கு சற்று அப்பால், இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்குள் (Exclusive Economic Zone) மற்றுமொரு ஈரான் நாட்டு கப்பல் வந்துள்ளதாகவும், அது அவசரமாக துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் எமது கவனத்திற்கு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதுதொடர்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,

இருப்பினும், இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அது உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தினால் இது தொடர்பில் முடிவெடுக்க முடியாவிட்டால், 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்ட முடிவை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அப்போது, இந்தியா தனது வான்பரப்பைப் பாகிஸ்தானிய விமானங்களுக்குத் தடை செய்திருந்த நிலையில், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஒரு நடுநிலையான கொள்கையைப் பின்பற்றி, பாகிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (டீஐயு) எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி அளித்திருந்தார்.

அப்போதைய பிரதமர் சிறிமாவோ அவர்கள் எடுத்த அந்த முடிவானது, மனிதாபிமான அடிப்படையில் அமைந்ததோடு, அத்தியாவசியத் தேவை மற்றும் நட்பு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *