ஈரானுக்கு எதிரான மோதல் : 181 குழந்தைகள் பலி
ஈரானின் பல இராணுவக் குழுக்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்கள்..........
Published March 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஈரானின் பல இராணுவக் குழுக்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இராணுவ பலத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா ஈரானை விட மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இதுவரை சுமார் 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதில் 181 பேர் ஈரானியக் குழந்தைகள், 7 பேர் லெபனானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு குழந்தை குவைத் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.