கைதியின் வங்கி அட்டையை பயன்படுத்திய கான்ஸ்டபிள் கைது

ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள.......

Published March 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடியாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த வங்கி அட்டையிலிருந்த பணத்தைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஒரு சுப்பர் மார்க்கெட்டில் பல பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *