தாய்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
2026 மார்ச் 10 முதல் 14 வரை தாய்லாந்தின் நடைபெற்ற.........
2026 மார்ச் 10 முதல் 14 வரை தாய்லாந்தின் நடைபெற்ற Inclusion Champions Network Study Visit நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார் .
இந்த நிகழ்வின் போது தாய்லாந்து பாராளுமன்றத்தில் உள்ளடக்கமான ஆட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துவது தொடர்பாக தாய்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை நிர்ணயிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினராகிய Pornchai Witayalerdpan அவர்களை சந்தித்து குடியுரிமை அமைப்புகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் சமூக உட்சேர்க்கை தொடர்பாக செயல்படும் சர்வதேச கூட்டாளர்களுடனும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது , பாராளுமன்றங்கள் அனைத்து சமூகங்களின் தேவைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆட்சி அமைப்புகள் உட்சேர்க்கைமிக்கதாக அமைய முக்கிய பங்காற்ற வேண்டும் குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் வரலாற்றாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவமும் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.