மத்திய கிழக்கு பதற்றம் : இலங்கை சுற்றுலா, ஏற்றுமதி துறைகள் பாதிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு ......
Published March 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30% வீழ்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.