பேருந்து – கார் மோதியதால் விபத்து
கல்கிசை சந்தியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் பேருந்து.......
Published March 15, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கல்கிசை சந்தியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காருக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த, சுற்றுலாச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றும் காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த பாதுகாப்பு பலூன்கள் உடனடியாக செயற்பட்டதன் காரணமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.