வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள்.......
Published March 15, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் தற்போது தடையின்றி இயங்கி வருவதாக அந்த அமைச்சு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக நடைமுறையை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய படிநிலைகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் தாங்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள் என்பதை அடையாளம் கண்டு, அதற்கேற்ப QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.