இன்று புனித நோன்புப் பெருநாள்
புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, இறைவனை.....
Published March 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, இறைவனை வழிபட்ட இஸ்லாமியப் பெருமக்கள் இன்று தமது ஈதுல் ஃபித்ர் எனப்படும் ரம்ழான் பெருநாளை நாடு முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இறைவனை நோக்கிய ஒரு மாத கால தவத்தின் நிறைவாக, ஈகைத் திருநாளாம் ரம்ழான் பண்டிகை இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இன்று காலை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.