கொழும்பில் மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக ............
Published March 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட இடங்களில் கடமையில் உள்ள ஊழியர்களிடமோ அல்லது டிஜிட்டல் முறையிலோ கட்டணங்களைச் செலுத்த முடியும்.
இதேவேளை விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.