அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் : எம்.பி மரிக்கார்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில்.....

Published March 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் சங்கிலித்தொடராக அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.எரிபொருள் விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தவுள்ள தாக்கங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது ,

இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் அரிசியின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் அதிக விலைக்கு மீன்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைந்துவிட்டன” என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான பொறி முறையொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *