சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை சர்வதேச........
Published March 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை சர்வதேச வானூர்தி சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.
இது குறித்து சிவில் வானூர்தி போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் தம்மிக ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச வானூர்திகளுக்கான Jet A-1 ரக எரிபொருள் எதிர்வரும் ஏப்ரல் 16 வரை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
உள்நாட்டு வானூர்தி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் சிறிய ரக வானூர்திகளுக்குத் தேவையான Avgas ரக எரிபொருள், அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.