இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்........
சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இன்று பாரிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட 7 ஆளில்லா வானூர்திகளை (Drones) அந்நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி மீண்டும் ஒரு புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைச் சுட்டு வீழ்த்தத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இரு நாடுகளும் அதியுச்ச பாதுகாப்பு விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.