கொலம்பிய வானூர்தி விபத்து
கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் ..........
Published March 24, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் (C-130 Hercules) ரக போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வானூர்தியில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் தரப்புகள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.