மத்திய கிழக்கில் தொடரும் ஏவுகணை தாக்குதல்
ஐந்து நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ..........
ஐந்து நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியபோதும், மத்திய கிழக்கில் பரவலாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய கிழக்கில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, இஸ்ரேல், ஈரான் மற்றும் அரபு நாடுகளில் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரானுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும், அதன் முன்னேற்றம் கருதியே ஐந்து நாட்களுக்கு தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.எனினும் அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், கடந்த சில மணிநேரங்களில் பல்வேறு நாடுகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் கண்டறிந்த சில நிமிடங்களில், ஜெருசலேம் நகரின் வான்பரப்பில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.