ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் அதிரடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை..........
Published March 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்தும் தனது முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் எவ்வித இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், போரைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நகர்வுகள் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.