மருத்துவர்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை ?
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு......
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சனிக்கிழமைகளை மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு, வாராந்த வேலை நாட்களை மீளமைத்து, சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது அவசியமாகும்.
ஏனைய அரச துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும், மருத்துவ நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்காகப் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை என மருத்துவ நிபுணர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.