கடற்றொழில் துறைக்கான விசேட எரிபொருள் திட்டம்
நாட்டில் நிலவும் விசேட சூழ்நிலை காரணமாக புதன்கிழமை அரசு............
நாட்டில் நிலவும் விசேட சூழ்நிலை காரணமாக புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, மீனவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன் கருதி பின்வரும் அலகுகள் வாரத்தின் 7 நாட்களும், 24 மணித்தியாலங்களும் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் , மேலதிக தகவல்கள் தேவைப்படின் 011 432 3389 என்ற 24 மணித்தியால அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.