கெஹெலியவிற்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

022 ஆம் ஆண்டு இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ், பதிவு..........

Published March 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2022 ஆம் ஆண்டு இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊழல் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகள் ஒவ்வொருவரும் தலா 50 மில்லியன் ரூபாயை (5 கோடி) அரசுக்குச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *