2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட திட்டம்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை..........
Published March 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை , சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்டன. இதனடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கான பரீட்சைகளும் ஜனவரி 16ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தன.