இணையவழி பண மோசடியில் 16 சீனர்கள் கைது
இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில்......
Published March 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதி ஒன்றில் வைத்து பெருமளவிலான கணினிகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2026.04.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.