கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு QR முறைமை
காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி..........
காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நேரில் பார்வையிட்டார்.
மருந்து பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, ‘ஸ்மார்ட் டோக்கன்’ முறைமைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக இவ்வாறான திட்டம் கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நடைமுறையினால் நோயாளர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் கிடைத்துள்ள வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் கேட்டறிந்ததுடன், இத்திட்டத்தை மேலும் முறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.