ஏப்ரல் முதல் smart பயணச்சீட்டு முறை

இலங்கை தொடருந்து திணைக்களம், CSRP செயற்திட்டத்தின் கீழ் ஏப்ரல்.........

Published March 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை தொடருந்து திணைக்களம், CSRP செயற்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் முதல் ‘ஸ்மார்ட்’ பயணச்சீட்டு (Smart Ticketing) முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள காகித பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும்.

இந்த முன்னோடித் திட்டம் ஏப்ரல் மாதத்தில் சில நாட்களுக்கு களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் நாரஹேன்பிட்ட, நுகேகொடை, மாகும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய தொடருந்து நிலையங்களை உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *