பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் போராட்டம் !

தமது செயற்பாடுகளைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று காலை 9.30 மணிக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த போராட்டத்தை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (PDA) ஏற்பாடு செய்திருந்தது
இதன்படி தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாகவும்
தற்போதைய எரிபொருள் வில சூத்திரத்தின் கீழ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 6% செயல்பாட்டு இலாபம் கிடைப்பதாகவும்
முன்னர் எரிபொருள் நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட்டு வந்தது. எனினும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் இந்த இலாபப் பங்குநீக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
மேலும் டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் திட்டமிட்டபடி நடைபெறாமையினாலும், விநியோகத்தில் ஏற்படும் தோல்விகளினாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வினைத்திறனாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும்
கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவன முற்கொடுப்பனவு வழங்கப்பட உரிமையிருந்தும், இதுவரை அத்தகைய கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்
தொடர்ச்சியாக நிலவும் இந்த பிரச்சினைகள் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிலைப்புத்தன்மையை கடுமையாகப் பாதித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தமக்கான தீர்வினை வலியுறுத்தியே இன்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கப்ட்டத்த்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .



