LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

மின்சாரக் கட்டணம் மேலும் 15% அதிகரிக்க வாய்ப்பு!

April 9, 2026 · Tamil Ceylon LK

தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அவதானம் செலுத்தியுள்ளது.

‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ (National System Operator Pvt Ltd) நிறுவனத்தினால் இந்த வருடத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாம் காலாண்டிற்காக இந்த மேலதிக கட்டண உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் 15 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், குறித்த யோசனை தொடர்பில் ஆணைக்குழு தற்போது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›