கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட பேருந்து சேவை

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வெளியிட்டுள்ளார்.
புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இந்த விசேட பேருந்து சேவைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும்.இதேவேளை கொழும்பு, பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
புத்தாண்டு காலம் நிறைவடைந்த பின்னரும், வார இறுதி நாட்களில் திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய இந்த விசேட பேருந்து சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




