LATEST
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!
உள்ளூர்

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்!

April 29, 2026 · Tamil Ceylon LK

கொழும்பு – மட்டக்களப்பு இடையே பயணிக்கும் ‘மீனகயா’ தொடருந்து சிற்றுண்டிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தையில் 1 லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாவாகும். எனினும், குறித்த வியாபாரி அதனை 160 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு போத்தலுக்கு 60 ரூபா மேலதிக இலாபம் ஈட்டியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதத்தை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Stories

மேலும் ›