LATEST
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!தேவினுவரர் கோவில் அருகே வீடு குறிவைத்து தாக்குதல்.முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!தெற்கு மாகாண 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சி முடிவு.அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!தேவினுவரர் கோவில் அருகே வீடு குறிவைத்து தாக்குதல்.முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!தெற்கு மாகாண 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சி முடிவு.
உள்ளூர்

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்!

April 29, 2026 · Tamil Ceylon LK

கொழும்பு – மட்டக்களப்பு இடையே பயணிக்கும் ‘மீனகயா’ தொடருந்து சிற்றுண்டிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தையில் 1 லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாவாகும். எனினும், குறித்த வியாபாரி அதனை 160 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு போத்தலுக்கு 60 ரூபா மேலதிக இலாபம் ஈட்டியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதத்தை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Stories

மேலும் ›