LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உள்ளூர்

17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

May 18, 2026 · Tamil Ceylon LK

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள், மலரஞ்சலி நிகழ்வுகள், தீபம் ஏற்றுதல் மற்றும் அமைதிப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடப் பகுதிக்கு பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›