உலகளாவிய உணவு மாநாட்டில் பிரதமர் ஹரினி!

பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, உலகளாவிய நனவு உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டில் (GCFSS) பங்கேற்பதற்காக இன்று (31) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பூட்டானில் நாளை (01) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்கக் கூட்ட அமர்வில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார். அங்கு அவர், “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் எழுதல்” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்புரையாற்றவும் உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பிரதமர் சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், நிலையான உணவு அமைப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
Follow & Share




