இறுதிப் போட்டிக்கு தெரிவான நியுசிலாந்து

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக

Published March 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக நியுசிலாந்து பதிவானது. நேற்றைய தினம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து 9 விக்கட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 169 ஓட்டங்களை பெற்றது. 170 என்ற வெற்றியிலக்கை ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து நியுசிலாந்து அடைந்தது.

டிம் சீபர்ட் 58 ஓட்டங்களையும் பின்ஆலன் 100 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு பலம் சேர்த்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *