மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணையம்
நிலக்கரி தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) வெளியிட்ட.....
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நிலக்கரி தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டில் மின்சார உற்பத்தியில் இடையூறு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால் மின்வெட்டு ஏற்படக்கூடும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின் உற்பத்தித் திறன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.