சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ADB நிகழ்வில் பிரதமர் உரை.

பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (10) மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை உரையாற்றவுள்ளார்.

Published March 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (10) மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுமே இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நாளை (11) மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *