மூன்றாவது நாளாக தொடரும் மேன்முறையீடு விசாரணை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் ...........
Published March 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஷிரான் குணரத்ன, அர்ஜுன ஒபேசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.