பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாடு : யாழ் மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
நேற்றைய தினம் புதன்கிழமை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் ......
நேற்றைய தினம் புதன்கிழமை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் நடைபெற்றுள்ளது.
பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும்.
கிராமிய மக்களின் வறுமையை அடையாளம் கண்டு எவ்வாறு அவர்களின் வாழ்வை மீட்க முடியும் எனவும் அதற்கான தீர்வு கிடைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதுடன் மூலம் நாட்டின் வறுமை இல்லாது ஒழிப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு அதிகமான டொலர்கள் வெளிநாட்டு செலாவணியாக சம்பாதித்துள்ளதாகவும், இலங்கை வரலாற்றிலேயே அதிக வெளிநாட்டு செலாவணி சம்பாதித்துள்ளதாக அவ் வருடம் காணப்படுகிறது என தெரிவித்தார்.