மார்ச் இறுதியில் மின் கட்டணம் உயருமா?

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம்........

Published March 12, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. 

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56% மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது. 

இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் மூன்றாம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கோரப்படுகின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *