கண்டி நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு விஜயம் : அமைச்சர் ஹர்ஷன
நேற்று பிற்பகல் த்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்....
Published March 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேற்று பிற்பகல் த்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் திருத்தப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அமைச்சரின் தலைமையில் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் பல நீதிவான்களின் பங்கேற்புடன் நீதிமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துஷாரி ஜயசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள், நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.