GeNext 5 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி
மார்ச் 17ஆம் திகதி கொழும்பு Sousa Banquet மண்டபத்தில் கொழும்பில் .......
மார்ச் 17ஆம் திகதி கொழும்பு Sousa Banquet மண்டபத்தில் கொழும்பில் அமைந்துள்ள GeNext Youth Club தனது 5ஆம் ஆண்டு நிறைவையும் வருடாந்திர இப்தார் நிகழ்ச்சியையும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இணைந்து, கொழும்பு பிராந்திய சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் உள்ளூர் GeNext இளைஞர் கழகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், அரச அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இளைஞரணி தலைவர் அப்துல் ரஹ்மான் அஸீம் தலைமையில் இயங்கிவரும் இக்கழகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் ஆதரவளித்தவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைத்தது.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி கிருஷாந்தி விதானகே அவர்களுக்கு நிகழ்வில் விசேட விருதும் வழங்கப்பட்டது.