வெளிநாட்டு ஆயுதங்களுடன் இருவர் கைது
பயாகலை, மெட்டியமுல்ல பகுதியில் இரண்டு துப்பாக்கிகள்..........
Published March 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பயாகலை, மெட்டியமுல்ல பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மனிதாபிமானப் படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரிவோல்வர் வகை துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் மற்றும் கைவிலங்கு ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.