LATEST
விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!
உள்ளூர்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பலுக்கு கட்டணம்

March 22, 2026 · Tamil Ceylon LK

சர்வதேச கடல் எல்லை சட்டங்களை மீறி, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) வரை கட்டணம் வசூலிப்பதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் பாதுகாப்பு மற்றும் வழித்தடத்தைப் பயன்படுத்துவதற்காக ‘பாதுகாப்பு வரி’ (Security Tax) செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் ஈரானின் ‘பாதுகாப்பான வழித்தடத்தை’ (Safe Corridor) பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும், அதேவேளை மேற்கத்திய நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்டத்தின் (UNCLOS) படி, சர்வதேச நீரிணைகளில் எந்தவொரு நாடும் ஒருதலைப்பட்சமாக வரி அல்லது கட்டணம் வசூலிக்க முடியாது. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளுக்குப் புறம்பானது எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›