பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர்...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது மைதானத்தின் அருகில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.