அடுத்த மாதம் முதல் விசேடபாதுகாப்பு திட்டம்
இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல்.......
Published March 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.