அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

0

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக காட்டிக்கொண்டு, இவ்வாறு குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்புசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடைசி குடிமகனுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.