குறிப்பிட சில பொருட்கள் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பைச் சாட்டாக வைத்து, சந்தையில்........
Published March 29, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
எரிபொருள் விலை அதிகரிப்பைச் சாட்டாக வைத்து, சந்தையில் பருப்பு மற்றும் நெத்திலி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், மொத்த மற்றும் சில்லறை சந்தையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சுப்பிரமணியம் இது குறித்துக் கூறுகையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும், இடைத்தரகர்களே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.