லெபனான் தாக்குதலில் பலியான 3 ஊடகவியலாளர்கள்
லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் மூன்று..........
Published March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் மூன்று ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர் . இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட இந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளர் பாத்திமா பெடோனி மற்றும் ஒளிப்பதிவாளர் முகமது பெடோனி ,ஹிஸ்புல்லா அமைப்பின் அல் மனார் தொலைக்காட்சியின் செய்தியாளர் அலி சுஐப் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவர்கள் இராணுவ இலக்குகள் அல்ல என வலியுறுத்தியுள்ளது.
காசா போரின் போது சிவிலியன்களைத் தாம் திட்டமிட்டு இலக்கு வைப்பதில்லை என இஸ்ரேல் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், ஊடகவியலாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .