கொழும்பில் நீர்வெட்டு !
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில்...
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்வெட்டு பகுதிகளாக, பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகள் அமுல் படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.