பிறந்த குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவமொன்று
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ள நிலையில், ஐந்து நாட்களான பின்னர் கடந்த 01ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
யாழ்.பண்டத்தரிப்பு சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் – வினிஸ்ரலா தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவாசக் குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.