மலையகத்தில் ரயில் தடம்புரள்வு
மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற
மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட ரயில் தண்டவாளத்தில் தடம்புரண்டுள்ளது.
இதனால் மலையக ரயில் சேவை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை உலபனையிலிருந்து கொட்டகலைக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தண்டவாள ரயில் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
தண்டவாள ரயில் குழுவினர் குறித்த ரயில் இயந்திரத்தை சீர் செய்யும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
தடம் புரண்ட தண்டவாள ரயில் இயந்திரம் சீர் செய்யும் வரை, பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில்கள் ரொசெல்லவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும் ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
